Saturday, July 19, 2014

Swiss Watches Now Tick Tock in Chennai

CHENNAI: Like Hollywood movies, even the new collection of watches from famous brands reach India almost a year after its release worldwide. But not any more. The Omega boutique at Express Avenue currently houses a collection of 30 newly-launched watches, which have not gone into production yet. This means that customers in Chennai get to check out the new designs along with the rest of the world. Imagine world wide release of a flick.
Sumil Mudgal from Omega tells us that customers in India are being given such an opportunity for the first time. “And Chennai is the first city we are showcasing it in. This is because the city has a huge market and the customers here are well-informed,” she says. After Chennai, the collection is set to tour Kolkata, Delhi, Bangalore and Mumbai.
The watches  on display have been selected from the 100-odd watches that were showcased at the Basel World 2014 Jewellery and Watches Festival — an event which brings together top brands like Rolex, Dior, Gucci and others besides Omega — in Switzerland in March. “I have chosen the best 30 as reference from each family of watches displayed at the festival,” says Sumil.
The collection includes Constellation Pluma, which as the name suggests, has feathery patterns engraved on the dial that is made of mother of pearl. Taking the feminine factor a notch up is the Deville, which in Chinese translates to butterfly. If it was feathers in Pluma, the dial in Deville flaunts tiny butterfly figures. Master co-axial calibres and its variants, besides the classy look, are known to be the only ones immune to magnets. While any watch in close proximity to a magnetic field would stop working, this one would stay unaffected, says Sumil. Yet another in the collection, Seamaster 300, boasts of the provision to check time clearly even when underwater.
“One that I could not bring to India is the Moonwatch collection, which was launched this year to celebrate the 45th anniversary of Apollo 11’s landing on the moon,” says Sumil. When the astronauts landed on the moon in 1969, they wore Omega watches. Since then, Omega is an official part of the equipment to space, she says.
By bringing the new pieces to the city, the brand aims to make its customers aware of the international scene. “Usually the retailer decides which watch will sell the most. He might select 10 out of the 30 from the new collection. The customer will not even know about a few designs. With this initiative, we give them an opportunity to see all of it,” says Sumil. “The store manager here has reached out to the customers interested in the brand. The moment the watches go into production and are ready for sale, they will be intimated,” she adds.
The prices of the new pieces start from Rs 2 lakh. The display is on till July 20 from 11 am to 8 pm.



Monday, July 14, 2014

ராணிமேரி கல்லூரியின் 100–வது ஆண்டு விழா: தபால் தலை வெளியிடப்பட்டது


சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ளது ராணிமேரி கல்லூரி. தமிழ்நாட்டின் முதல் பெண்கள் கல்லூரியான இந்த கல்லூரி 1914–ம் ஆண்டு ஜூலை 14–ந்தேதி தொடங்கப்பட்டது.

இந்த கல்லூரியின் முதல் முதல்வராக இங்கிலாந்தை சேர்ந்த டிலாஹே இருந்தார். இந்த கல்லூரியின் 50–வது ஆண்டு பொன்விழாவுக்கு அப்போது பிரமதராக இருந்த இந்திரா காந்தி வந்து இருந்தார்.

இப்படி பெயரும், புகழும் மற்றும் பசுமை வாய்ந்த ராணிமேரி கல்லூரியின் 100–வது ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்கியது.

நூற்றாண்டு விழாவையொட்டி தபால் தலை இன்று வெளியிடப்பட்டது. உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தலைமை தாங்கி தபால் தலையை வெளியிட்டார். 90 வயதான முன்னாள் முதல்வர் செல்வி ஜெகதலம்மாள் இதை பெற்றுக்கொண்டார்.
100 மரக்கன்றுகளும் நடப்பட்டது. 100 பலூன்கள் பறக்க விடப்பட்டன. இதே போல நூற்றாண்டு விழா கேக்கும் வெட்டப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

முன்னாள் மாணவிகயும், பாடகிகளுமான வாணி ஜெயராம், அனுதாரா ஸ்ரீராம், உமா ரமணன் ஆகியோரும் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

ராணிமேரி கல்லூரியும், முன்னாள் மாணவிகளும் இதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நூற்றாண்டு விழா ஒரு வருடம் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

திங்கள், ஜூலை 14, 2014

தீ விபத்தில் கட்டிடம் சேதம்: ஸ்டேட் வங்கின் 3 கிளைகள் வேறு இடத்திற்கு மாற்றம்




சென்னை பாரிமுனையில் இயங்கி வந்த ஸ்டேட் வங்கி பிரதான கிளை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வங்கி பணம், வாடிக்கையாளர் நகை மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் தீக்கு இறையாகாமல் தப்பின. அங்கிருந்த பணம், மற்றும் நகைகள் மற்ற கிளைகளுக்கு மாற்றப்பட்டன. 

நேற்று முன்தினம் நடந்த இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து நடந்து உள்ள இடத்தில் 3 கிளைகள் இருந்து உள்ளது. இதனால் இதன் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அவர்களுடைய நகைகள், ஆவணங்கள் பத்திரமாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் பிரதாப்ராவ் சென்னை எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

பாரிமுனை ஸ்டேட் வங்கி பிரதான கட்டிடம் தீவிபத்துகாண காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மின் கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணங்களால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து இப்போது சொல்ல இயலாது. கூடிய விரைவில் விபத்துக்கான காரணத் தெரிந்துவிடும். வாடிக்கையாளர்களுடைய பணம், நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் எந்தவித சேதமும் ஏற்படாத வண்ணம் உள்ளன.

அவை எழும்பூரில் ரெயில் நிலையத்தில் உள்ள கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை. இந்த விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இயங்கிய 3 கிளைகள் வேறு கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை மெயின் கிளை பிரகாசம் சாலையில் உள்ள பிராட்வே கிளைக்கு மாற்றப்பட்டது. ராஜாஜி சாலை கிளை ஸ்டேட் வங்கி எழும்பூரில் உள்ள கிளைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

சிறுதொழில் கடன் தரும் கிளையான எஸ்.எம்.ஏ. சென்னை கிளை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள கிளைக்கு மாற்றப்பட்டு உள்ளது. அந்த கிளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்கள் வங்கி பணிகளை மேற் கொள்ளலாம்.
மாற்றப்பட்ட 3 கிளைகளும் இன்று முதல் செயல்படுகிறது. புதிய இந்த கிளைகள் பற்றி விவரங்கள் தெரியாமல் அலைந்து திரியும் வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கு தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விபத்து நடந்த பாரம் பரிய கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் வங்கி பணி தொடங்க முடியுமா என்பது குறித்து தொல்லியல் துறை நிபுணர்ககளிடம் கருத்து கேட்டபிறகுதான் முடிவு செய்யப்படும். 

இதுபோன்ற பாரம்பரிய மிக்க கட்டிடத்தில் செயல்படும் வங்கிகளில் தீவிபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 4 வங்கிகள் பாரம்பரிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் செயல்படும் வங்கி கிளைகள் ஆராயப்படும்.

தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் கிடைத்த அதே வசதிகள் இந்த கிளைகளுக்கும் கிடைக்கும். எந்த கஷ்டமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பொது மேலாளர் சஞ்சீவ்சடோ, உதவி பொது மேலாளர் சீனிவாசராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதிய கிளைகள் பற்றி தகவல் அறிய சென்னை மெயின் கிளை 94458 61231, ராஜாஜி சாலை கிளை 94458 60962, எஸ்.எம்.சி. சென்னை கிளை 94458 66364 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

திங்கள், ஜூலை 14, 2014

3 லட்சம் ரூபாயில் உருவான ஸ்டேட் வங்கியின் தாய்வீடு: எரிந்து போன முதல் அரசாங்க வங்கிக் கட்டிடத்தின் கதை

ஸ்டேட் பாங்க் கட்டிடத்தில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டபோது எடுத்த படம். படம்: கே.பிச்சுமணி
ஸ்டேட் பாங்க் கட்டிடத்தில் சனிக்கிழமை தீவிபத்து 

ஏற்பட்டபோது எடுத்த படம். படம்: கே.பிச்சுமணி


சென்னையில் தீப்பிடித்து இடிந்து போன ஸ்டேட் வங்கிக் கட்டிடம்தான், ஸ்டேட் வங்கியின் தாய் வீடாக இருந்துள்ளது. இந்தக் கட்டிடம் மெட்ராஸ் வங்கி என்ற பழம் பெருமை மிக்க வங்கியாகவும், அரசாங்க வங்கி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஜார்ஜ் டவுண் கிளை, சிறு குறு தொழில்களுக்கான கிளை மற்றும் வீட்டு வசதி சிறப்புக் கிளைக் கட்டிடம், சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நாசமானது. இந்த தீ விபத்தில் எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் பெரும்பாலான சுவர்கள் இடிந்து வெறும் எலும்புக்கூடாக காட்சியளிக்கின்றன.

பாரம்பரியமிக்க இந்தக் கட்டிடம், பாரத ஸ்டேட் வங்கியின் தாய் வீடாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் பேங்க் ஆப் மெட்ராஸ், பேங்க் ஆப் மும்பை மற்றும் பேங்க் ஆப் பெங்கால் (கொல்கத்தா) என்று மூன்று துறைமுக மாநகரங்களின் பெயர்களில் வங்கிகள் தனியாக செயல்பட்டன.

 பிரிட்டிஷ் கவர்னர் வில்லியம் ஜிபோர்ட் உத்தரவின்பேரில் 1806ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மெட்ராஸ் வங்கி என்ற அரசு வங்கி தொடங்கப்பட்டது. பின்னர் மெட்ராஸ் வங்கி, கர்நாடிக் வங்கி, ஏசியாட்டி வங்கி மற்றும் பிரிட்டிஷ் பேங்க் ஆப் மெட்ராஸ் ஆகியவற்றை இணைத்து, 30 லட்ச ரூபாய் மூலதனத்துடன் மெட்ராஸ் வங்கி 1843ல் தொடங்கப்பட்டது. 

ஜார்ஜ் கோட்டையில் தற்போது அருங்காட்சியகம் இருக்கும் கட்டிடத்தில் இந்த வங்கி செயல்பட்டது.


‘இம்பீரியல்’ வங்கிக்காக இந்தோ சார்சனிக் கட்டிடக் கலை அடிப்படையில் பொறியாளர் ஜேக்கப் வடிவமைத்த வரைபடம்.
இம்பீரியல்’ வங்கிக்காக இந்தோ சார்சனிக் கட்டிடக் கலை அடிப்படையில் பொறியாளர் ஜேக்கப் வடிவமைத்த வரைபடம்.

இதேபோல், 1809ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் பேங்க் ஆப் பெங்கால் வங்கியை பிரிட்டிஷ் பேங்க் ஆப் இந்தியா என்று அறிவித்து, அரசு நிர்வாக நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர்.

 இதைத் தொடர்ந்து, 1840ம் ஆண்டு பேங்க் ஆப் மும்பையும், 1843ல் பேங்க் ஆப் மெட்ராஸும் இணைக்கப்பட்டு, பிரிட்டிஷாரால் இம்பீரியல் வங்கி என்ற பெயரில் இணைக்கப்பட்டன.

பின், ராஜாஜி சாலையில் (அப்போதைய வடக்கு பீச் சாலை), வங்கிக்காக தனியாக இடம் வாங்கி, இம்பீரியல் வங்கி அங்கு மாற்றப்பட்டது. தற்போது தீவிபத்தில் இடிந்து போன கட்டிடம் இருக்கும் இடம், ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டது.

 கொலோனெல் சாமுவேல் ஜேக்கப் என்பவர் இக்கட்டிடத்திற்கான வடிவமைப்பை தயாரித்தார். ஹென்றி எட்வின் என்பவரால் இது சிறிது மாற்றியமைக்கப்பட்டு, 1897ம் ஆண்டில் இந்தோ சார்சனிக் கட்டிடக் கலையை பயன்படுத்தி, பிரபல கட்டிட நிபுணர் நம்பெருமாள் செட்டியார் மூலமாக மூன்று லட்ச ரூபாய் செலவில் இக்கட்டிடம் கட்டப்பட்டது.

பின்னர் 1955ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் கூடி தனி சட்டம் இயற்றி இம்பீரியல் வங்கியை பாரத ஸ்டேட் வங்கி என பெயர் மாற்றம் செய்தது. இதையடுத்து, தமிழகத்தின் முதல் ஸ்டேட் வங்கி கிளை, தலைமை அலுவலகம், சென்னையின் பிரதானக் கிளை ஆகியன, தற்போது விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன.

இதுகுறித்து, ஸ்டேட் வங்கியின் மக்கள் தொடர்புக்கான கூடுதல் துணை மேலாளர் கே.தயாநிதி கூறும்போது, “1955ம் ஆண்டு மெட்ராஸ் வங்கி, ஸ்டேட் வங்கியான பின், அதன் பெரிய கிளையாக இந்த கட்டிடம் செயல்பட்டது. பின்னர் தலைமையகம் அருகிலுள்ள கட்டிடத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டது. தற்போது இந்தக் கட்டிடத்தில் ராஜாஜி சாலை கிளை, சென்னை பிரதானக் கிளை மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான கிளை செயல்பட்டு வருகிறது,’என்றார்.

பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் சங்க தலைவர் சுரேஷ்குமார் கூறும் போது,’தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் பாரம்பரிய மான கட்டிடம். இங்குதான் வங்கியின் ஊழியர்கள் தொடர்பான அனைத்து தொழிற்சங்கங்களும் தொடங்கப்பட்டன. தற்போதும் இங்கு தொழிற்சங்க அலுவலகங் கள் உள்ளன. கட்டிடத்தின் வரலாறு குறித்து தனியாக புத்தகமே வெளியிடப்பட்டுள்ளது,’என்றார்.

சென்னையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்டேட் பாங்க் தலைமை அலுவலகத்தின் முகப்பு. படம்: ஆர்.ரகு
சென்னையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்டேட் பாங்க் தலைமை அலுவலகத்தின் முகப்பு. படம்: ஆர்.ரகு


சுமார் 17 ஆயிரம் கிளைகள் என விரிந்த ஒரு வங்கியின் முதல் கட்டிடம் தற்போது தீ விபத்தின் மூலம் வெறும் காட்சிப் பொருளாக சிதிலமடைந்து விட்டது. இதேபோன்று, பல கட்டிடங்கள் சென்னையில் பாரம்பரிய சின்னமாக இருந்து, அதன் இறுதிக் கட்டத்தை சந்தித்து வருகின்றன.

சென்னையில் எழிலகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கிய கலாஸ் மகால், அண்ணாசாலையிலுள்ள பாரத் இன்ஷூரன்ஸ் கட்டிடம், பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவிலுள்ள ஒய்.எம்.ஐ.ஏ., கட்டிட வளாகம் போன்றவை இந்த வரிசையில், அபாயகரமான, கேட்பாரற்ற நினைவுச் சின்னங்களாக மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த கட்டிடங்களையும், மீதமுள்ள பாரம்பரியக் கட்டிடங்களையும் புனரமைத்து, அதன் வரலாற்றைக் காக்க அரசு விரைந்து முன் வர வேண்டுமென்பதே, அனைவரின் கோரிக்கையாக உள்ளது

ஹெச். ஷேக் மைதீன் தி இந்து திங்கள், ஜூலை 14, 2014




Sunday, July 13, 2014

சென்னை வங்கிக் கட்டிட தீ விபத்து... 40 ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றிய உதவி மேலாளர்!








சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருந்ததற்கு, வங்கியின் உதவி மேலாளர் ஒருவர் தான் முக்கியக் காரணமாக இருந்துள்ளார். கட்டிடத்தில் தீ பற்றியதாக அவர் முதலில் அளித்த எச்சரிக்கையின் அடிப்படையிலேயே மற்ற ஊழியர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
நேற்று மதியம் சென்னை பாரிமுனையில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான எஸ்.பி.ஐ வங்கிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சனிக்கிழமை மதிய வேளையாகையால் பணி முடிந்து வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.
சென்னை வங்கிக் கட்டிட தீ விபத்து... 40 ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றிய உதவி மேலாளர்!
ஆனபோதும், 2-வது மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்று மதியம் வங்கி ஊழியர்கள் சங்க கூட்டம் நடைபெற இருந்ததால், அங்கு மட்டும் பிற வங்கிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடி இருந்தனர்.
கட்டிடத்தில் தீப்பற்றிய தகவலை அவர்களுக்கு கூறி, அவர்களை கட்டிடத்தில் இருந்து வெளியேற கூறியுள்ளார் ‘பாரத ஸ்டேட்' வங்கி ஆதி திராவிடர் பழங்குடியினர் ஊழியர்கள் பொதுநலச்சங்க தலைவரும், நுங்கம்பாக்கம் பாரத ஸ்டேட் வங்கியின் உதவி மேலாளருமான முருகன் என்பவர். இதனால் தான் பெருத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப் பட்டது.
இது தொடர்பாக முருகன் கூறுகையில், ‘நான் சங்க பணியின் காரணமாக விபத்து நடைபெற்ற கட்டிடத்தின் முதல் தளத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது திடீரென்று புகை வந்தது. உடனே சென்று பார்த்தபோது தீ மளமளவென எரிந்துகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். உடனே கட்டிடத்தில் உள்ள கேன்டின், 2-வது தளத்தில் யாரேனும் இருக்கிறார்களா என்று ஓடிச் சென்று பார்த்தேன். தீ, தீ.. உடனே அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியபடி ஓடினேன். இதனால் தீ விபத்தில் சிக்காமல் 40 பேர் வெளியே ஓடி வந்துவிட்டனர்" எனத் தெரிவித்தார்.
விபத்து நடைபெற்ற வங்கிக்கு எதிரே, செல்போன் கடை நடத்தி வரும் அசார் என்பவர் விபத்துக் குறித்துக் கூறுகையில், "நான் வழக்கம் போல் கடையில் இருந்தேன். அப்போது 3.15 மணி அளவில் திடீரென்று வங்கி அலுவலகத்தில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது.
உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தேன். 15 நிமிடத்தில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்க தொடங்கினர். இறைவன் கருணையால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஜெயசித்ரா  13 ஜுலை 2014

தீயில் சிக்கி இரையான 200 ஆண்டு சென்னை எஸ்.பி.ஐ வங்கிக் கட்டடம்... ரூ 100 கோடி தப்பியது!







சென்னை: நேற்று சென்னை பாரிமுனையில் உள்ள 200 ஆண்டு பழமையான வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 மாடிகள் இடிந்து விழுந்தன. 

எனினும் அதிர்ஷ்டவசமாக அக்கட்டிடத்தில் இருந்த ரூ 100 கோடி பணம் தீக்கிரையாகவில்லை. சென்னை பாரி முனையில் உள்ள இந்த பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான இரண்டு மாடிக் கட்டிடம் அரண்மனை வடிவிலானது. 





சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பாரம்பரியமிக்க வரலாற்று சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்கும் மையமான ஸ்டேட் வங்கியின் எஸ்.எம்.இ. கிளை உள்ளது. 





முதல் தளத்தில் ‘பாரத ஸ்டேட்' வங்கியின் 6-வது மண்டல அலுவலகமும், 2-வது மாடியில் வங்கியின் 2-வது மண்டல அலுவலகமும் இயங்கி வருகிறது. 

வங்கி ஊழியர்களின் அனைத்து ஆவணங்களும் இங்கு தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை என்பதால் மதியம் பணி முடிந்ததும் பிற்பகல் 2 மணி அளவில் ஊழியர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். 

இந்நிலையில், நேற்று மதியம் இக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் திடீர் தீ பற்றியது.


தீயணைப்பு வீரர்கள்..

தீயின் உக்கிரத்தை கருத்தில் கொண்டு தண்டையார்பேட்டை, எழும்பூர், வேப்பேரி உள்பட 18 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.


இடிந்து விழுந்த கட்டடம்... 

முழு வீச்சில் தீயணைப்பு பணி தொடங்குவதற்கு முன்பாகவே 2-வது மாடியில் மேல்தளம் அப்படியே எரிந்து உள்ளே விழுந்தது. இதனால் முதல் மற்றும் 2-வது தளத்தில் உள்ள அத்தனை ஆவணங்களும் எரிந்து சாம்பலாயின. பின்னர் சிறிது நேரத்தில் முதல் தளத்தின் பெரும் பகுதியும் இடிந்து விழுந்தது.



பணப்பெட்டகம்... 

இதற்கிடையே, முதல் தளத்தில் ‘பாரத ஸ்டேட்' வங்கி கிளைகளுக்கு அனுப்புவதற்காக, ரிசர்வ் வங்கியில் இருந்து நேரடியாக கொண்டு வரப்படும் கோடிக்கணக்கான பணம் வைக்கப்படும் அறை உள்ளது. அந்த அறை தீ பற்றிக்கொள்ளாதபடி, தீ தடுப்பு சாதனங்களோடு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், தரை தளத்தில் உள்ள வங்கி கிளையில் 4 ஏ.டி.எம்.கள் உள்ளன. மேலும் இ-கார்னர் வசதியும், ‘காயின் வெண்டிங் மிஷின்' வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தப்பிய பணம்..

நேற்று இங்கு மொத்தமாக ரூ 100 கோடி பணம் இருந்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இப்பணம் மற்றும் லாக்கரில் இருந்த பணம் தீவிபத்தில் சிக்கவில்லை. ஆனால், தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள்பல எரிந்து நாசமாகி விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து துண்டிப்பு... 

தீ விபத்து குறித்த தகவல் அறிந்தும் ராஜாஜி சாலை பகுதியில் வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடிவிட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


மின்கசிவே காரணம்... 

சுமார் 4 மணி நேரம் போராடி தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். வங்கி கட்டிடத்தின் முதல் தளத்தில் தேவையற்ற காகித குவியல் இருந்ததாகவும், அதில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மின்கசிவால் தீப்பற்றி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆம்புலன்ஸ்கள்... 

இதற்கிடையே, தீயை அணைக்கும் முயற்சிகளுக்கிடையே வங்கி கட்டிடத்திற்குள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் முயற்சியிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கட்டிடத்திற்குள் யாரும் சிக்கவில்லை என்று உறுதியாக தெரிந்த போதும், அவசரத் தேவைக்காக வங்கி அருகே தயார் நிலையில், நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயசித்ரா  13 ஜுலை 2014